Friday, November 21, 2025 11:45 am
அயகம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கொலம்பேவ பகுதியில் நேற்று இரவு தாய் மற்றும் அவரது 16 வயது மகன் மீது அசிட் வீச்சு நடத்தப்பட்டுள்ளது. இதில் பலத்த காயங்களுக்கு உள்ளான பெண் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
அசிட் வீசிய சம்பவம் தொடர்பில் தகவல் அளிக்கப்பட்டதைத் தொடர்ந்து, சம்பவ இடத்துக்கு விரைந்த பொலிஸார் பாதிக்கப்பட்ட பெண் மற்றும் அவரது மகனை அயகம வைத்தியசாலையில் சேர்த்துள்ளனர். வைத்தியசாலையில் 40 வயதான குறித்த பெண் உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்த பெண்ணின் சடலம் இரத்தினபுரி வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.
அயல் வீட்டாருடன் ஏற்பட்ட தனிப்பட்ட தகராறின் காரணமாகவே இச் சம்பவம் நிகழ்ந்துள்ளதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.

