Wednesday, January 7, 2026 4:41 pm
பாதாள உலகக் குழுத் தலைவர் ‘கணேமுல்ல சஞ்சீவ’ கொலைச் சம்பவத்தில் பிரதான சந்தேகநபரான இஷாரா செவ்வந்திக்கு உதவியதாகக் கூறப்படும் இருவருக்கு விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இஷாரா செவ்வந்திக்கு உதவியமை மற்றும் அவருக்கு தங்குமிடம் வழங்கியமை தொடர்பாக கைது செய்யப்பட்ட நந்தகுமார் தக்ஷி மற்றும் பிறிதொரு நபரும் கொழும்பு தலைமை நீதவான் அசங்க எஸ். போதரகம முன் ஆஜர்படுத்தப்பட்டு எதிர்வரும் ஒன்பதாம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அடுத்த விசாரணை வரை சந்தேக நபர்கள் எதிர்வரும் ஒன்பதாம் திகதி வரை காவலில் இருக்க வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

