Monday, December 8, 2025 9:55 am
யாழ்ப்பாணம், பண்ணை கடல் பகுதியில் நீரில் மூழ்கி இரண்டு பேர் நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை உயிரிழந்துள்ளனர்.
இந்த சம்பவத்தின் போது யாழ் நகர் பகுதியைச் சேர்ந்த 18 மற்றும் 20 வயதான இருவரே உயிரிழந்தனர்.
பண்ணை கடலில் நீந்த சென்ற நால்வர் நீரில் மூழ்கிய நிலையில் அப்பகுதியில் நின்றவர்களால் நால்வரும் மீட்கப்பட்டு யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். இரண்டு பேர் உயிரிழந்ததுடன், இரண்டு பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
சம்பவம் தொடர்பாக யாழ்ப்பாணம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

