Saturday, October 25, 2025 11:03 am
பஹ்ரைனில் நடைபெற்றுவரும் ஆசிய இளையோர் விளையாட்டுப் போட்டி 2025 இல் இலங்கைக்கு மேலும் இரண்டு வெண்கலப்பதக்கங்கள் கிடைக்கப்பெற்றுள்ளன.
மாத்தளை யட்டவத்த வீர பராக்ரம இரண்டாம் நிலைப் பாடசாலையின் மாணவரான சத்துர துலஞ்சன ஜயதிஸ்ஸ ஈட்டி எறிதல் போட்டியில் 62.51 மீற்றர் தூரம் எறிந்து வெண்கலப் பதக்கத்தை வென்றுள்ளார்.
அதே போன்று நீர்கொழும்பு கேட்வே கல்லூரியைச் சேர்ந்த ஷானுக கோஸ்டா என்னும் மாணவன் 400 மீற்றர் ஓட்டப்போட்டியில் 47.72 வினாடிகளில் ஓடி முடித்து வெண்கலப் பதக்கம் வென்றுள்ளார்.
இந்தநிலையில் ஆசிய இளையோர் விளையாட்டுப் போட்டி 2025 இல் இலங்கைக்கு மேலும் இரண்டு வெண்கலப்பதக்கங்கள் கிடைக்கப்பெற்றுள்ளன.

