Wednesday, March 18, 2026 11:45 am
கட்டுநாயக்க விமான நிலையத்தில் பெங்கொங்கிலிருந்து இலங்கை வந்த இளைஞர் மற்றும் யுவதி ஆகிய இருவர் குஷ் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட சுற்றவளைப்பில் குறித்த இருவரும் கைது செய்யப்பட்டனர்.
பறிமுதல் செய்யப்பட்ட போதைப்பொருளின் மதிப்பு சுமார் 15 கோடி ரூபா என மதிப்பிடப்பட்டுள்ளது. கைதான இருவரும் 22 வயதுடையவர்கள் எனப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

