Friday, November 14, 2025 2:29 pm
கொழும்பு, காசல் வீதி மகளிர் வைத்தியசாலையில் இரு பெண் குழந்தைகள் ஒட்டிய நிலையில் பிறந்துள்ள சம்பவம் நிகழ்ந்துள்ளது.
வைத்தியசாலை பணிப்பாளர் வைத்தியர் அஜித் தண்டநாராயணான் இந்த சம்பவம் பற்றி தெரிவிக்கையில்,
பன்னாலாவைச் சேர்ந்த 29 வயதுடைய தாயாருக்கு சிசேரியன் மூலம் இந்த இரட்டைக் குழந்தைகள் பிறந்துள்ளனர். இரட்டை குழந்தைகள் ஆரோக்கியத்துடன் பிறந்ததாகவும், ஒவ்வொரு குழந்தையும் தலா 2.2 கிலோ கிராம் எடை கொண்ட நிலையில் பிறந்ததாகவும் அவர் உறுதிபடுத்தியுள்ளார். குறித்த இரட்டை குழந்தைகள் அவற்றின் வயிற்றுப் பகுதியால் இணைக்கப்பட்டுள்ளனர் எனவும், இன்னும் மூன்று மாதங்களில் கொழும்பு லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையில் பிரிப்பு அறுவை சிகிச்சை நடைபெற உள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு காசல் வீதி மகளிர் வைத்தியசாலையில் பதிவு செய்யப்பட்ட முதல் ஒட்டிப் பிறந்த இரட்டையர் பிறப்பு இதுவாகும் என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும்.

