Wednesday, December 3, 2025 9:50 am
இன்று புதன்கிழமை (3) பிற்பகல் 2 மணிக்குப் பின் நாட்டின் சில பகுதிகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடுமென வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
அந்த வகையில் பதுளை, மாத்தளை மாவட்டங்களிலும், வடமத்திய, கிழக்கு ,வடக்கு, மாகாணங்களிலும் பிற்பகல் 2 மணிக்குப் பின் ஆங்காங்கே மழை அல்லது இடியுடன் கூடிய மழை வீழ்ச்சி பதிவாகும் சாத்தியம் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் மேல், மத்திய , ஊவா, தென் மாகாணங்களிலும் குருநாகல், அம்பாறை மாவட்டத்திலும் சில இடங்களில் அதிகாலை வேளையில் பனியுடன் கூடிய வானிலை நிலவும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இடியுடன் கூடிய மழை வீழ்ச்சி, பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய ஆபத்துக்கள் தொடர்பில் பொதுமக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

