Tuesday, October 28, 2025 11:09 am
வளிமண்டலவியல் திணைக்களம் (Department of Meteorology) இன்று (28.10.2024) வெளியிட்டுள்ள அறிக்கையில், மேற்கு, சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேற்கு மாகாணங்களில் பல தடவைகள் மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் வடக்கு மாகாணத்திலும், மற்றும் அனுராதபுரம் மாவட்டத்திலும், மத்திய மலைகளின் மேற்கு சரிவுகளிலும், சப்ரகமுவ, மத்திய, தெற்கு, வடமத்திய மற்றும் வடமேற்கு மாகாணங்களிலும், திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களிலும் சில நேரங்களில் மழை பெய்யக்கூடும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் தனது வானிலை முன்னறிவிப்பில் தெரிவித்துள்ளது.
அதுமட்டுமல்லாமல் அவ்வப்போது மணிக்கு (50-60) கி.மீ வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும்.
பலத்த காற்றினால் ஏற்படும் சேதங்களைக் குறைக்க போதுமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து பொதுமக்கள் அவதானமாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளதோடு, இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில், மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறும் பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.

