Wednesday, December 24, 2025 11:19 am
தையிட்டி சட்டவிரோத விகாரைக்கு எதிர்ப்புத் தெரிவித்து கடந்த ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற அமைதிப்போராட்டத்தில் ஈடுப்பட்டபோது கைதுசெய்யப்பட்ட வலிகாமம் கிழக்கு பிரதேச சபையின் தவிசாளர் தியாகராஜா நிரோஷ் சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
குறித்த போராட்டம் நடைபெற்றபோது வலிகாமம் கிழக்கு பிரதேச சபைத் தவிசாளர் தியாகராஜா நிரோஷ் மற்றும் வேலன் சுவாமிகள் உள்ளிட்ட ஐவர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு பின்னர் மல்லாகம் நீதிமன்றினால் பிணையில் விடுவிக்கப்பட்டனர்.
வேலன் சுவாமிகள் ஏற்கனவே யாழ். போதானா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவரும் நிலையில் வலிகாமம் கிழக்கு பிரதேச சபைத் தவிசாளர் தியாகராஜா நிரோஷ் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

