Tuesday, January 6, 2026 1:23 pm
டயலொக் மெகா வாசனா அதிஸ்டச் சீட்டிழுப்பில் பரிசுகளைப் பெற்றுள்ளதாகக் கூறி, இணையம் மூலம் மக்களை ஏமாற்றி 01 மில்லியன் ரூபாயினை பணமோசடி செய்த குற்றச்சாட்டுடன் தொடர்புடைய சந்தேக நபர் வடக்கு மாகாணப் பிரிவின் கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் நேற்று திங்கட்கிழமை (05) கைது செய்யப்பட்டுள்ளார்.
இதன்படி ,வடக்கு மாகாண கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் நடத்தப்பட்டு வந்த விசாரணைகளுக்கு அமைய இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
குறித்த சந்தேக நபர் மட்டக்களப்பு பகுதியைச் சேர்ந்த 29 வயதுடையவர் என தெரியவந்துள்ளது.
இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வடக்கு மாகாண கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவு மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

