Monday, December 29, 2025 11:51 am
இந்தியா அணிக்கும் , இலங்கை அணிக்கும் இடையிலான 4வது T20 போட்டி திருவனந்தபுரத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை (28) நடைபெற்றது.
இந்திய அணிக்கு எதிரான 4வது T20 கிரிக்கெட் போட்டியில் இலங்கை வீராங்கனைகள் தோல்வியைத் தழுவினர்.
நாணயசுழற்சியில் வென்ற இலங்கை அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி இந்திய அணி முதலில் களமிறங்கியது ,போட்டி ஆரம்பத்தில் இருவரும் அதிரடியாக விளையாடினர்.
இப்போட்டியில் இந்திய அணியினால் நிர்ணயிக்கப்பட்ட 222 ஓட்டங்கள் என்ற இலக்கை நோக்கித் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி , 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 191 ஓட்டங்களைப் பெற்றது.
சர்வதேச T20 கிரிக்கெட் வரலாற்றில் இலங்கை வீராங்கனைகள் பெற்ற அதிகூடிய ஓட்ட எண்ணிக்கையாக இது பதிவாகியுள்ளது.
இலங்கை அணிக்கு அதிரடியான ஆரம்பத்தைப் பெற்றுக்கொடுத்த ஹசினி பெரேரா 20 பந்துகளில் 33 ஓட்டங்களையும் , சமரி அத்தபத்து 37 பந்துகளில் 52 ஓட்டங்களையும் பெற்றனர்.
இவர்களைத் தவிர , ஹர்ஷிதா சமரவிக்ரம 13 பந்துகளில் 20 ஓட்டங்களையும் , நிலக்ஷிகா சில்வா 11 பந்துகளில் 23 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.
5 போட்டிகள் கொண்ட இந்தத் தொடரை 4-0 என்ற கணக்கில் இந்திய அணி ஏற்கனவே கைப்பற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மேலும் இப் போட்டியில் அதிவேகமாக 10,000 ஓட்டங்களைக் கடந்த வீராங்கனை என்ற சாதனையை ஸ்மிருதி மந்தனா படைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
அதுமட்டுமல்லாது , 10,000 ஓட்டங்களைக் கடந்த 2வது இந்திய வீராங்கனையாகவும் , உலகளவில் 10,000 ஓட்டங்களைக் குவித்த 4வது வீராங்கனையாகவும் இவர் புதிய மைல்கல்லை எட்டியுள்ளார்.

