2025 ஆசிய ரக்பி செவன்ஸ் தொடரின் இறுதிச் சுற்று இன்று ஆரம்பமான நிலையில் ஆரம்பப் போட்டியாக உஸ்பெகிஸ்தானுக்கு எதிராக நடைபெற்ற போட்டியில் இலங்கை அணி 26 க்கு 14 என்ற புள்ளிகள் வித்தியாசத்தில் இலகுவாக வெற்றி பெற்றது.
இப் போட்டித் தொடர் கொழும்பு குதிரைப் பந்தய மைதானத்தில் நடைபெறுகின்றது.