Tuesday, December 23, 2025 3:05 pm
நாட்டில் ஏற்பட்ட டித்வா புயல் காரணமாக கல்வி பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைகள் ஒத்திவைக்கப்பட்டது.
இதன்படி , ஒத்திவைக்கப்பட்ட பாடங்களுக்குத் தோற்றவுள்ள மாணவர்களின் முகவரிகளில் ஏதேனும் மாற்றங்கள் ஏற்பட்டிருந்தால் 011 2784537 அல்லது 011 2788616 என்ற தொலைபேசி இலக்கங்களினூடாக தங்களது தகவல்களை உடனடியாக அதிகாரிகளுக்கு அறியப்படுத்துமாறு பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் இந்திகா குமாரி கோரிக்கை விடுத்துள்ளார்.
முன்னர் ஒதுக்கப்பட்ட பரீட்சை மத்திய நிலையங்களுக்கு செல்ல முடியாத பரீட்சார்திகள் , முன்கூட்டியே பரீட்சைகள் திணைக்களத்திற்கோ அல்லது பாடசாலை அதிபருக்கோ அறியப்படுத்த வேண்டும் என்றும் , குறித்த பரீட்சார்திகளுக்கு மாற்றுப் பரீட்சை மத்திய நிலையங்கள் ஒழுங்கு செய்யப்படவுள்ளன என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
மேலும் , விண்ணப்பதாரர்களின் அனுமதி அட்டைகள் அல்லது தேசிய அடையாள அட்டைகள் சேதமடைந்தாலோ அல்லது அழிக்கப்பட்டிருந்தாலோ , அதனை உடனடியாக தெரிவித்து தேவையான உதவிகளைப் பெற்றுக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகின்றனர்.

