Saturday, November 8, 2025 8:57 am
தேசிய மக்கள் சக்தி அரசு தமிழ் மக்களை ஏமாற்றிவிட்டது. எனவே, பாதீடு தொடர்பில் எமது கட்சியால் கடுமையான தீர்மானம் எடுக்கப்படும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார்.
தமிழ் மக்களுக்கு வழங்கிய உறுதிமொழிகளை நிறைவேற்ற தேசிய மக்கள் சக்தி அரசு நடவடிக்கை எடுக்கவில்லை. குறிப்பாக தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை, காணி விடுவிப்பு தொடர்பில் எந்த விடயங்களும் அறிவிக்கப்படவில்லை.
ஜனாதிபதியுடன் பேச்சு நடத்துவதற்கு நேரம் கோரி இருந்தோம். கடந்த மாதம் கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தாலும் அதற்குரிய பதில் ஜனாதிபதி அனுர தரப்பில் இருந்து இன்னும் வழங்கப்படவில்லை.
இலங்கை தமிழரசுக் கட்சிதான் மூன்றாவது பெரிய கட்சி.. அந்தக் கட்சியால் வழங்கப்பட்ட கடிதத்துக்கு ஜனாதிபதி ஒருவர் பதில் வழங்காமல் இருப்பது கவலைக்குரிய விடயம்.
எனவே, பாதீடு தொடர்பில் நாமும் காத்திரமானதொரு முடிவை எடுக்க வேண்டும்” என நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்தார்.

