Wednesday, January 14, 2026 12:08 pm
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் நிறை போதையில் சிகிச்சை பெற வந்தவரால் பாதுகாப்பு உத்தியோகஸ்தர் தாக்கப்பட்ட சம்பவம் இடம்பெற்றுள்ளது.
போதனா வைத்தியசாலைக்கு இன்று அதிகாலை 1.40 மணியளவில் நிறை போதையில் இரத்த காயங்களுடன் ஒருவர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு அவருக்கு 24ஆம் இலக்க விடுதியில் சிகிச்சை வழங்கப்பட்டது.
அதன் போது குறித்த நபர் தாதிய உத்தியோகஸ்தர்கள் உள்ளிட்டவர்களுடன் முரண்பாட்டு தூஷண வார்த்தைகளை பேசி விடுதியில் இருந்த ஏனைய நோயாளர்களுக்கு சிரமங்களை ஏற்படுத்தும் விதமாக நடந்து கொண்டுள்ளார்.
இது குறித்து பாதுகாப்பு உத்தியோகஸ்தர்களுக்கு அறிவிக்கப்பட்டதை அடுத்து அவர்கள் விடுதிக்கு விரைந்து குறித்த நபரை கட்டுப்படுத்த முயன்ற போது தனது உடைமையில் மறைத்து வைத்திருந்த கத்தியால் பாதுகாப்பு உத்தியோகஸ்தரை தாக்கிவிட்டு தப்பித்து சென்றுள்ளார்.
இதன்போது அங்கிருந்த ஒரு உத்தியோகஸ்தருக்கு கைகளில் காயம் ஏற்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

