Thursday, February 12, 2026 4:04 pm
கனடாவில் பாடசாலையொன்றுக்குள் புகுந்து துப்பாக்கிச்சூடு நடத்தியவர் ஜெஸ்ஸி வான் ரூட்செலர் என்றழைக்கப்படும் 18 வயதான திருநங்கை என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்திலுள்ள பாடசாலையொன்றில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் ஐந்து மாணவர்கள், ஆசிரியர் ஒருவர் கொல்லப்பட்டனர். மேலும் 24 பேர் காயமடைந்தனர்.
துப்பாக்கிச் சூடு நடத்திய ஜெஸ்ஸி முதலில் தனது வீட்டில் 39 வயது தாய் மற்றும் 11 வயது தம்பியைச் சுட்டுக் கொன்றுள்ளார். அதன் பின்னரே தான் முன்பு பயின்ற பாடசாலைக்குச் சென்று தாக்குதல் நடத்தியுள்ளார்.
தாக்குதலுக்குப் பிறகு ஜெஸ்ஸி பாடசாலை நூலகத்தில் தன்னைத்தானே சுட்டுக்கொண்டு தற்கொலை செய்துகொண்டார். இவரையும் சேர்த்து இந்த சம்பவத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.
ஆணாகப் பிறந்த ஜெஸ்ஸி தன்னை திருநங்கையாக அடையாளபப்படுத்தி கொண்டார். சமூக அழுத்தம் காரணமாக அவருக்குக் மனநல பிரச்சனைகள் இருந்ததாகவும், முன்னதாக பல்வேறு சந்தர்ப்பங்களில் பொலிஸார் அவரது வீட்டிற்குச் சென்று வெவ்வேறு காரணங்களுக்காக விசாரணை நடத்தியுள்ளதும் தெரியவந்துள்ளது.
மேற்படி தாக்குதல் சம்பவத்தில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக அரசு அலுவலகங்களில் ஏழு நாட்களுக்குத் தேசியக் கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்படும் என கனடா பிரதமர் அறிவித்தார்.

