Saturday, November 8, 2025 8:28 am
தேசிய மக்கள் சக்தியின் 2026 ஆம் ஆண்டுக்கான பாதீட்டினை சர்வதேச நாணய நிதியம் தயாரித்துள்ளது என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
நேற்றைய தின் பாதீட்டு ஜனாதிபதியின் பின்னர், நாடாளுமன்றில் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
2026ஆம் ஆண்டு பாதீட்டில், மக்களுக்கான சலுகைகளும் இல்லை. சமூக யதார்த்தத்தைப் புரிந்து கொண்டு முன்வைக்கப்பட்ட பாதீடாக அமையவில்லை இந்த பாதீடு அமையவில்லை.
2026 ஆண்டில் வறுமை ஒழிப்புத் திட்டங்கள் எதுவும் உள்ளடங்கவில்லை என எதிர்க்கட்சித் தலைவர் விமர்சித்துள்ளார்.
நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 50 வீதம் மேலாகப் பங்களிக்கும் நுண், சிறிய மற்றும் நடுத்தர தொழில் முயற்சியாளர்களின் தொழில் நடவடிக்கைகள் வீழ்ச்சி கண்டு, அவர்களினது வாழ்க்கை சீர்குலைந்து போயுள்ளன.
இவர்களைப் பாதுகாக்க இந்த அரசால்முடியாது போயுள்ளது. விவசாயிகள், மீனவர்கள், சுயதொழில் புரிவோர், வேலையில்லாப் பட்டதாரிகள் என அனைவரும் தங்கள் பிரச்சினை களுக்கு எந்தத் தீர்வுகளும் இல்லாமல் தவிக்கின்றனர்.
இந்த வரவு – செலவுத் திட்டமானது ஏமாற்று, பொய்கள் வேலைகள் தமது இருப்பை முன்னோக்கிக் கொண்டு செல்லும் வரவு – செலவுத் திட்டமாக அமைந்துள்ளது.
நாட்டைக் கட்டியெழுப்புவதற்குச் சட்டக் கட்டமைப்புச் சட்டமொன்றை உருவாக்குவேன் என்று ஜனாதிபதி கூறினாலும், அரசுடன் தொடர்புடையவர்கள்போதைப்பொருள் கடத்தலில் ஈடுபடும் இந்நேரத்தில், இது தொடர்பான தகவல்களை ஊடகங்களுக்கு வழங்க வேண்டாம் என்று சுற்றறிக்கைகளை வெளியிட்டுள்ளார்.
இதற்கு முன்னர் இந்த அரசு போதைப் பொருள் கடத்தல் குறித்து ஊடகங்களில் செய்திகளை வெளியிட்டு வந்தன. ஆனால், இன்று திசைகாட்டி அரசைச் சேர்ந்தோர் இந்தப் போதைப்பொருள் கடத்தலில் சிக்கிய பிற்பாடு இவற்றை ஊடகங்களில் காண்பிப்பதைத் தவிர்த்து அதனை மறைக்க நடவடிக்கை எடுத்து வருகின்றது.
இரட்டை நாக்கு கொண்ட அரசாக இது காணப்படுகின்றது. மக்களுக்கு நிவாரணம் வழங்காத, ஐ.எம்.எவ். எழுதிய வரவு – செலவுத் திட்டத்தின் வடிவத்தை எடுத்த வரவு – செலவுத்திட்டமாக இது அமைந்துள்ளது.
வறுமை ஒழிப்புத் திட்டங்கள் எதுவும் இந்த வரவு – செலவுத் திட்டத்தில் உள்ளடங்கிக் காணப்படவில்லை. முன்மொழியப்பட்டுள்ள வரவு – செலவுக் கருத்திட்டங்களுக்கு மிகக் குறைந்த தொகையே ஒதுக்கப்பட்டுள்ளன.
2025 வரவு – செலவுத் திட்ட ஒதுக்கீடுகளைப் பார்க்கும் போது, ஒதுக்கப்பட்ட ஒவ்வொரு ஒதுக்கீடுகளினதும் முன்னேற்றம் தொடர்பான அறிக்கை முன்வைக்கப்பட வேண்டும். அது இன்னும் சமர்ப்பிக்கப்படவில்லை.
இவ்வாறு முன்னேற்ற மீளாய்வுகளைச் சமர்ப்பிக்காத நிதி அமைச்சரான ஜனாதிபதி இன்று பொய்களை அடுக்கி வைத்தார். இந்த ஆளும் தரப்பினர் மீண்டும் மீண்டும் மக்களை ஏமாற்றி வரு கின்றனர். அரசுக்கு இன்னும் மனச்சாட்சி வரவில்லை.’ என சஜித் பிரேமதாசா தெரிவித்தார்.

