Saturday, December 6, 2025 3:37 pm
சுவிஸ்லாந்திலிருந்து 2.6 மெட்ரிக் தொன் பேரிடர் நிவாரண உதவிகளோடு விமானம் ஒன்று இன்று சனிக்கிழமை காலை கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தது.
நீர் சுத்திகரிப்பு அலகுகள் மற்றும் தொடர்புடைய செயல்பாட்டு உபகரணங்கள் உட்பட 17 பொதிகளைக் கொண்ட நிவாரணபொருட்களுடன் சூரிச்சிலிருந்து எடெல்வைஸ் ஏர் விமானம் WK064 மூலம் கொண்டு வரப்பட்டுள்ளது.

