Friday, January 9, 2026 12:57 pm
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க எதிர்வரும் 15ம் திகதி வடக்கு மாகாணத்துக்கு விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ளார்.
பாதுகாப்பு அலுவல்கள் பற்றிய அமைச்சு சார் ஆலோசனைக் குழுக்கூட்டமொன்று ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையில் கடந்த (07) புதன்கிழமை நாடாளுமன்றத்தில் இடம்பெற்றது.
இதன்போது வடக்கு மற்றும் கிழக்கில் காணிகளை விடுவிப்பது, வீதிகளைத் திறப்பது, தையிட்டி திஸ்ஸ விகாரையால் ஏற்பட்டுள்ள பிரச்சினைகள் போன்றவற்றை நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஜனாதிபதியின் கவனத்துக்கு கொண்டுவந்தனர்.
இந்தப் பிரச்சினைகளுக்கு சாத்தியமான தீர்வுகளை வழங்குவதற்கு அதிகாரிகளுக்குத் தேவையான அறிவுறுத்தல்களை ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க வழங்கியதுடன் எதிர்வரும் 15ம் திகதி தான் வடக்குக்கு வரும் போது இப்பிரச்சினைகள் தொடர்பில் ஆழமாக ஆராய்வோம் எனவும் கூறியுள்ளார்.

