Monday, January 19, 2026 4:37 pm
ஜப்பானின் முதல் பெண் பிரதமரான சனே டகைச்சி எதிர்வரும் வெள்ளிக்கிழமை அந்நாட்டின் பாராளுமன்றத்தைக் கலைப்பதாக அறிவித்துள்ளார்.
நாட்டின் பாதுகாப்பு மற்றும் பொருளாதார வளர்ச்சிக்கான தனது புதிய திட்டங்களுக்கு மக்களின் ஆதரவைப் பெறும் நோக்கில் இந்த இடைத்தேர்தலுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
465 இடங்களைக் கொண்ட பாராளுமன்றத்தில் இந்தத் தேர்தல் நடைபெறவுள்ளது.
பொருளாதார நெருக்கடி மற்றும் விலைவாசி உயர்வு குறித்த கவலைகள் மக்களிடையே நிலவி வரும் சூழலில் இந்தத் தேர்தல் முடிவு ஜப்பானின் எதிர்கால பாதுகாப்பு வியூகங்களைத் தீர்மானிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த ஒக்டோபர் மாதம் ஜப்பானின் முதல் பெண் பிரதமராக சனே டகைச்சி பதவியேற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

