Wednesday, March 11, 2026 12:09 pm
காலி தேசிய வைத்தியசாலையின் குளிரூட்டிகளில் வைக்கப்பட்டிருந்த 84 ஈரானிய கடற்படையினரின் சடலங்களை, ஈரானிய தூதரக அதிகாரிகளிடம் ஒப்படைக்குமாறு காலி பிரதம நீதவான் சமீர தொடங்கொட இன்று காலி தேசிய வைத்தியசாலைப் பணிப்பாளருக்கு உத்தரவிட்டார்.
காலி துறைமுகப் பொலிஸாரால் காலி பிரதம நீதவான் நீதிமன்றத்தில் முன்வைக்கப்பட்ட கோரிக்கையை ஏற்றுக்கொண்ட நீதவான் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.

