அனலைதீவு வடக்கு மாதர் கிராம அபிவிருத்தி சங்கத்திற்கு உற்பத்தி பொருட்களை உற்பத்தி செய்வதற்காக இக் கட்டடம் அமைக்கப்பட்டுள்ளது.
தீவகப்பகுதிகளில் வாழ்வாதாரத்திற்கு இன்னலுக்குள்ளாகும் மக்களிற்கு இக் கட்டடம் பெரிதும் உதவியாக இருக்கும் என மக்கள் தெரிவிக்கின்றனர்.
பாராளுமன்ற மன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரனின் குறித்தொதுக்கப்பட்ட 10 இலட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீட்டின் மூலம் இக் கட்டடம் அமைக்கப்பட்டுள்ளது.
இக் கட்டடமானது நேற்றைய தினம் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரனால் திறந்து வைக்கப்பட்டது.
இந் நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன், ஊர்காவற்றுறை பிரதேச சபையின் தவிசாளர் அன்னலிங்கம் அன்னராசா, ஊர்காவற்றுறை பிரதேச செயலகத்தின் பிரதேச செயலாளர் வனஜா செல்வரட்ணம், ஊர்காவற்றுறை பிரதேச சபை உறுப்பினர்கள், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், அனலைதீவு வடக்கு மாதர் கிராம அபிவிருத்தி சங்கத்தின் நிர்வாகத்தினர், பொது மக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

