Thursday, December 18, 2025 3:31 pm
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் வெனிசுவேலா எண்ணெய்க் கப்பல்கள் தொடர்பில் வெளியிட்ட உத்தரவினால் நாடு முழுவதும் எரிபொருள் விலையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதன்படி எரிபொருள் விலை ஒரு சதவீதத்தால் அதிகரித்துள்ளது.
அமெரிக்க மேற்கு டெக்சாஸ் இடைநிலை மசகு எண்ணெய் 1.5 வீதத்தால் உயர்ந்து ஒரு பீப்பாய் 56.12 டொலராகவும் , பிரெண்ட் மசகு எண்ணெய் விலை 1.5 வீதத்தால் உயர்ந்து ஒரு பீப்பாய் 59.79 டொலராகவும் அறிவிக்கப்பட்டுள்ளன.
அமெரிக்க எண்ணெய் வர்த்தகர்களின் கூற்றுப்படி, இந்த நடவடிக்கையால் ஒரு நாளைக்கு 0.4 முதல் 0.5 மில்லியன் பீப்பாய் எண்ணெய் விநியோகத்துக்கு பாதிப்பு ஏற்படுத்தலாம் .
அதனால் , ஒரு பீப்பாய்க்கான விலை 1-2 டொலரால் அதிகரிக்கக்கூடும்.
கப்பல்களுக்கு எதிராக விதித்த தடையை அமெரிக்கா எவ்வாறு சீர்செய்யும் என்பது தெளிவாகத் தெரியவில்லை ஆதலால் வெனிசுவேலாவின் மசகு எண்ணெய் ஏற்றுமதி கடுமையாகக் குறைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

