Thursday, November 27, 2025 10:58 am
கடந்த சில நாட்களாக நாட்டில் தொடர்ந்து பெய்து வரும் அடைமழை காரணமாக, நுவரெலியாவில் அதிகமான தாழ்நிலப் பகுதிகள் முற்றாக மூழ்கியுள்ளன. பேருந்து நிலையம் உட்பட நுவரெலியா நகர எல்லைக்குள் உள்ள அனைத்து பகுதிகளும் இன்று (27) முற்றிலுமாக நீரில் மூழ்கியுள்ளன, மேலும் சுமார் இரண்டு முதல் நான்கு அடி உயரத்திற்கு தண்ணீர் நிரம்பியுள்ளது.
நுவரெலியா நகரத்தில் உள்ள பல கடைகளும் நீரில் மூழ்கியுள்ளன, மேலும் அவற்றின் நுழைவாயில்களைத் திறக்க முடியாத அளவுக்கு தண்ணீர் தேங்கி இருப்பதாகவும், அனைத்து பொருட்களும் சேதமடைந்துள்ளதாகவும் நம்பப்படுகிறது.
மேலும், நுவரெலியா நகர எல்லையின் லாசன் தெரு பகுதியில் உள்ள பல வீடுகள் மற்றும் நுவரெலியா ரேஸ்கோர்ஸில் உள்ள குடியிருப்பு முழுமையாக நீரில் மூழ்கியுள்ளன.
இதன்படி நுவரெலியாவில் உள்ள கிரிகோரி குளத்தின் மதகு திறக்கப்படாததால் நுவரெலியா நகரம் நீரில் மூழ்கி வருவதாக ஆர்வலர்கள் குற்றம் சாட்டியிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
மேலும், நுவரெலியாவைச் சுற்றியுள்ள பம்பரேகெலே, பில்லிமன கண்ட போல, ஹவா எலியா மற்றும் போராலா போன்ற இடங்களில் பல வீடுகள் மற்றும் பயிர்கள் நீரில் மூழ்கியுள்ளன.
இச் சீரற்ற வானிலை காரணமாக பல சாதாரண மக்களின் வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.மேலும் அனைத்து வங்கிகள், பல அரசு நிறுவனங்கள் மற்றும் ஏராளமான கடைகள் முற்றிலுமாக மூடப்பட்டிருக்கின்றது.
நுவரெலியா பெருநகர நகராட்சியிடம் இந்த பிரச்சினை குறித்து விசாரித்த போது, சுரங்கப்பாதையை விரைவாக திறந்து நகரத்தை இயல்பு நிலைக்கு கொண்டு வர பேரிடர் மேலாண்மை பிரிவுடன் இணைந்து உடனடி நடவடிக்கைகளை எடுத்து வருவதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.

