Tuesday, December 16, 2025 10:37 am
நாட்டில் ஏற்பட்ட அனர்த்த நிலைமையையும் மற்றும் பண்டிகைக் காலத்தையும் கருத்தில் கொண்டு ,கர்ப்பிணிப் பெண்களுக்கு வழங்கப்படவுள்ள 5000 ரூபா போஷாக்கு கொடுப்பனவு இன்று செவ்வாய்க்கிழமை (16) முதல் வழங்கப்படவுள்ளது.
இந்த கொடுப்பனவு , 2025 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 30 ஆம் திகதி வரை தாய் சேய் நல நிலையங்களில் பதிவு செய்துள்ள கர்ப்பிணிப் பெண்களுக்கு தொடர்ந்து வழங்கப்படும்.
இவ் ஊட்டச்சத்து கொடுப்பனவை அடையாளப்பூர்வமாக வழங்கும் நிகழ்வு , மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜ் தலைமையில் நடைபெறவுள்ளது.
அதன்படி இன்று காலை 9.30 மணிக்கு வெள்ளவத்தை சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தில் இந்த நிகழ்ச்சி நடைபெற உள்ளது.
மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சின் கீழ் உள்ள முன்பிள்ளைப்பருவ அபிவிருத்திக்கான தேசிய செயலகத்தின் ஒரு திட்டமாக , இந்தக் கொடுப்பனவு டிசம்பர் 16 ஆம் திகதி முதல் பிரதேச செயலகங்களூடாக ஊடாக விநியோகிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

