நல்லூர் பிரதேச சபையால் குப்பைகள் தரம் பிரிக்கும் நிலையம் அமைக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகனுக்கு மனு சமர்ப்பிக்கப்பட்டிருந்த நிலையில், அரியாலை காரைமுனங்கு பகுதியை ஆளுநர் இன்று வெள்ளிக்கிழமை காலை (17.10.2025) நேரில் சென்று பார்வையிட்டார்.
அங்கு முன்னெடுக்கப்பட்டு வரும் தரம் பிரிப்பு நடவடிக்கைகளையும் எதிர்காலத்தில் அங்கு முன்னெடுக்கப்படவுள்ள பணிகள் தொடர்பிலும் நல்லூர் பிரதேச சபையின் செயலாளர் ஆளுநருக்கு எடுத்துக் கூறினார்.
இந்தக் கண்காணிப்பு பயணத்தின் போது ஆளுநரின் செயலாளர், நல்லூர் பிரதேச சபையின் செயலாளர், அந்தப் பகுதி கிராம அலுவலர் மற்றும் பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர் உள்ளிட்டோர் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

