மட்டக்களப்பு வவுணதீவு பொலிஸ் பிரிவில் இன்று அதிகாலை காட்டு யானை தாக்கியதில் நான்கு பிள்ளைகளின் தாய் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
குறித்த பெண் தனது வீட்டில் உறங்கிக் கொண்டிந்த போது வீட்டினுள் காட்டு யானை வருவதைக் கண்டு பயத்தில் வெளியே ஓடிய போது குறித்த யானை தாக்கியதில் சம்பவ இடத்திலே உயிரிழந்துள்ளார்.
இச்சம்பவத்தில் 58 வயதுடைய நான்கு பிள்ளைகளின் தாயான வைரமுத்து மலர் என்பவரே உயிரிழந்துள்ளார்.
சம்பவ இடத்திற்கு சென்ற வவுணதீவு பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர். மண்முனை மேற்கு பிரதேச செயலாளரின் அனுமதிக்கமைவாக யானை தாக்கி இறந்தமைக்காக பத்து இலட்சம் ரூபா நிதியுதவி வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டதுடன் முற்பணமாக ஒரு இலட்சம் ரூபா காசேலை கிராம உத்தியோகத்தர் மற்றும் அனர்த்த நிவாரண முகாமைத்துவ பிரிவு உத்தியோகத்தரினால் வழங்கப்பட்டுள்ளது.