Tuesday, December 30, 2025 11:29 am
நாடளாவிய ரீதியில் நேற்று திங்கட்கிழமை (29) பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பில் 30134 பேர் பரிசோதிக்கப்பட்டுள்ளதுடன், சந்தேகத்தின் பேரில் 635 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
அதற்கமைய , 38 பேர் குற்றங்களுடன் நேரடியாக அடையாளம் காணப்பட்டுள்ளதோடு , கைது செய்ய பிறப்பிக்கப்பட்ட பிடியாணைகளுக்கமைய 294 பேரும் , திறந்த பிடியாணைகளுக்கமைய 196 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலும் , மதுபோதையில் வாகனம் செலுத்திய 368 பேரும் , கவனக்குறைவாக வாகனம் செலுத்திய 39 பேரும் , பிற போக்குவரத்து குற்றங்களுக்காக 4509 பேரும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

