Saturday, December 27, 2025 10:34 am
கிணறு ஒன்றிலிருந்து 40 வயதான குடும்பஸ்தர் ஒருவரின் சடலம் யாழ்ப்பாணம், உடுவில் – மல்வம் பகுதியில் மீட்கப்பட்டுள்ளது.
குறித்த நபர் மதுபோதையில் வீட்டிற்குச் சென்று தனது மனைவியுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். அதன் பின் வீட்டை விட்டு வெளியேறிய அவர் இரவு முழுவதும் வீடு திரும்பவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் உறவினர்கள் அவரைத் தேடியபோது வீட்டின் அருகிலுள்ள காணியொன்றில் இருந்த கிணற்றிலிருந்து அவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
இதற்கு முன்னர் குறித்த கிணற்றுக்கட்டின் மீது அமர்ந்து உயிரிழந்தவர் மது அருந்தும் வழமையைக் கொண்டிருந்ததாகக் கூறப்படுகிறது.
சம்பவம் இடத்திற்கு வருகை தந்த திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ. ஜெயபாலசிங்கம் சடலம் மீதான மரண விசாரணைகளை மேற்கொண்டார்.
சுன்னாகம் பொலிஸாரும், தடயவியல் பொலிஸாரும் இணைந்து மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

