Friday, December 5, 2025 2:02 pm
யாழ்ப்பாணம், நெடுந்தீவுக்கு தெற்கே உள்ள கடல் பகுதியில் நேற்று முன்தினம் இலங்கை கடற்படை நடத்திய விசேட தேடுதல் நடவடிக்கையின் போது சட்டவிரோதமாக நாட்டிற்கு கொண்டு வர முயன்ற சுமார் 160,000 வெளிநாட்டு சிகரெட்டுகள், அழகுசாதனப் பொருட்கள் மற்றும் கைக்கடிகாரங்கள் ஆகியவை கைப்பற்றப்பட்டன.
இலங்கை கடற்படையினரால் நெடுந்தீவுக்கு தெற்கே உள்ள கடல் பகுதியில் நடத்தப்பட்ட சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் போது, கடல் பகுதியில் கைவிடப்பட்டிருந்த 09 சந்தேகத்திற்கிடமான பைகள் பரிசோதிக்கப்பட்டன.
அதில் சட்டவிரோதமாக நாட்டிற்கு கொண்டு வர முயன்ற சுமார் 160,000 வெளிநாட்டு சிகரெட்டுகள், 150 அழகுசாதன கிரீம்கள், லோஷன்கள் மற்றும் 10 கைக்கடிகாரங்கள் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டன.
மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக கைப்பற்றப்பட்ட பொருட்கள் நெடுந்தீவு பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

