Monday, October 27, 2025 4:24 pm
கிளிநொச்சி ஜேர்மன் தொழிற்பயிற்சி நிலையத்தின் உப அதிபர் இடம்மாற்றம் செய்யப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து, ஜேர்மன் தொழிற்பயிற்சி நிலைய மாணவர்கள் இன்று திங்கட்கிழமை கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
தற்போதைய அதிபர் ஓய்வு வயதையும் தாண்டி கடமையாற்றுகின்ற நிலையில், துடிப்புடன் செயற்பட்ட உப அதிபர் இடம்மாற்றம் செய்யப்பட்ட சம்பவம் மாணர்களின் நலனில் பாதிப்பை ஏற்படுத்தும் எனவும், இடம்மாற்றத்தை இரத்து செய்ய வலியுறுத்தியும், இந்த போராட்டம் மாணவர்களால் முன்னெடுக்கப்பட்டது.


