Tuesday, December 23, 2025 3:44 pm
25 நாட்களின் பின்னர் மீண்டும் இன்று செவ்வாய்க்கிழமை (23) கிளிநொச்சி ஏ-35 வீதி பாலம் மறுசீரமைக்கப்பட்டு மக்களின் பாவனைக்காக இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெயசங்கரால் காணொளி மூலம் திறந்து வைக்கப்பட்டுள்ளது.
கடந்த 28 ஆம் திகதி ஏற்பட்ட டித்வா பேரிடர் காரணமாக கிளிநொச்சி மாவட்டத்தின் ஏ- 35 பிரதான பாலம் கடும் பாதிப்புக்குள்ளாகியது.
இதன் காரணமாக கிளிநொச்சி முல்லைத்தீவு மாவட்டங்களுக்கான போக்குவரத்து பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது.
இதனால் , கிளிநொச்சி முல்லைத்தீவுக்கான போக்குவரத்து வட்டக்கச்சி ஊடாகவே மேற்கொள்ளப்பட்டு வந்தது.
குறித்த பாலத்தின் புனரமைப்பு பணிகளை இந்திய இராணுவத்தினர் மற்றும் இலங்கை இராணுவத்தினர் , வீதி அபிவிருத்தி அதிகார சபையினர் இணைந்து துரித கதியில் முன்னெடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
குறித்த வீதியின் ஊடாக பயணிப்பவர்கள் அதிக வேகத்தில் வாகனத்தை செலுத்தாது உங்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் பயணிக்குமாறு வீதி அபிவிருத்தி அதிகார சபையினர் தெரிவித்துள்ளனர்.

