Friday, January 9, 2026 11:57 am
கனடாவில் இடம்பெற்ற வாகன விபத்தில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இளம் தாய் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
3 பிள்ளைகளின் தாயான 35 வயதுடைய ராஜகாந் அனுஷா, புங்குடுதீவு – கண்ணகைபுரம் பகுதியை சேர்ந்தவர் தற்போது கனடாவில் வசித்து வருகின்றார்.
Etobicoke Dixon (எட்டோபிகோக் டிக்சன்) பகுதியில் கனரக வாகனத்தைச் செலுத்தி வந்த 26 வயதான சாரதி வாகனத்தைக் கட்டுப்படுத்த முடியாமல், வீதியைக் கடக்கும் போது குறித்த இளம் குடும்பப் பெண் மீது மோதியுள்ளார்.
நேற்று காலை இடம்பெற்ற இந்த சம்பவத்தில் குறித்த பெண் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
விபத்துச் தொடர்பில் மேலதிக விசாரணைகளை அந் நாட்டுப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

