Sunday, November 2, 2025 10:28 am
செம்மணியை புதைகுழி விவகாரத்தினை மீண்டும் புதைக்காமல் உண்மையை வெளிப்படுத்து என்ற கோசத்துடன் நேற்றையதினம் யாழ்ப்பாண பேருந்து நிலையத்திற்கு முன்னர் போராட்டம் ஒன்று இடம்பெற்றது.
தென்னிலங்கையில் இருந்து வருகைதந்த குழுவொன்றினால் இப்போராட்டம் இடம்பெற்றது. இப்போராட்டத்துக்கான ஏற்பாட்டினை சமவுரிமை இயக்கம் ஏற்பாடு செய்திருந்தது.
செம்மணி புதைகுழி, பயங்கரவாத தடைச் சட்ட, பட்டலந்தை வதை முகாம், காணாமல் ஆக்கப்பட்டோருக்கு நீதி, ஏனைய புதைகுழிகள் போன்றவற்றுக்கு உடனடி விசாரணையையும், நீதியையும் கோரி இப்போராட்டமானது முன்னெடுக்கப்பட்டது.





“அனைத்து காணாமல் ஆக்கல்களுக்கும் இப்போதாவது நீதியை வழங்கு, செம்மணியை மீண்டும் புதைக்க இடம்கொடுக்காமல் உண்மையை வெளிப்படுத்து, மீண்டும் மீண்டும் அடக்குமுறைகள் வேண்டாம், பயங்கரவாத தடைச் சட்டத்தை உடனே நீக்கு, அனைத்து தேசிய இனங்களுக்குமான உரிமையை உறுதிசெய்” என்ற வாசகங்களை எழுதிய பதாகைகளை ஏந்தியவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த போராட்டத்தில் பௌத்த மதகுருக்கள், சமவுரிமை இயக்கத்தினர், வசந்த முதலிகே, சிங்கள மக்கள், தமிழ் மக்கள் என பலரும் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.

