Saturday, December 6, 2025 4:21 pm
நீண்ட இடையூறுகளுக்குப் பின்னர் இண்டிகோ விமான சேவைகள் இயல்பு நிலைக்கு திரும்புவதாகவும், விமானங்களின் நிலையை அறிந்த பிறகு பயணத்தை உறுதி செய்யுமாறு பயணிகளுக்கு டெல்லி விமான நிலையம் அறிவுறுத்தியுள்ளது.
ஊழியர்கள் பற்றாக்குறை, தொழில்நுட்ப பிரச்சினை உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் இண்டிகோ விமானங்கள் கடந்த 3 தினங்களாக தொடர்ந்து ரத்து செய்யப்பட்டன.
நவம்பரில் மட்டும் 1200 விமானங்கள் ரத்து செய்யப்பட்டு காணப்பட்டது. ஆனால் நேற்று ஒரு நாளில் மட்டும் 1000 விமானங்களின் சேவை நிறுத்தப்பட்டது. இதனால் விமான நிலையங்களில் பயணிகள் குவிந்திருந்த நிலையயை அவதானிக்க முடிந்தது.
இது தொடர்பாக விமானப் போக்குவரத்து பொது இயக்குநரகம் விசாரணைகளை நடாத்தி வருகிறது. டிசம்பர் 10 முதல் 15ம் திகதிக்குள் பிரச்னைகள் சரி செய்யப்பட்டு வழக்கமான விமான சேவைகள் வழங்கப்படும் என இண்டிகோ நிறுவனத்தின் பொது இயக்குனர் தெரிவித்துள்ளார்.
இண்டிகோ விமான சேவைகள் மெல்ல மெல்ல இயல்பு நிலைக்கு திரும்புவதாகவும், பயணிகள் விமானத்தின் நிலையை ஒருமுறை சரிபார்த்து விட்டு விமான நிலையத்திற்கு வருமாறு டெல்லி விமான நிலைய நிர்வாகம் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

