Saturday, December 6, 2025 1:22 pm
மஹியங்கனையில் இந்திய மருத்துவக் குழுவால் முழுமையாக செயல்படும் கள மருத்துவமனை அமைக்கப்பட்டு வருகிறது.
இயற்கை பேரிடரால் பாதிக்கப்பட்ட மக்களை ஆதரிப்பதற்காக ஒப்ரேஷன் சாகர் பந்து (Operation Sagar Bandhu) திட்டத்தின் ஒரு பகுதியாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக கொழும்பில் அமைந்துள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.
கடுமையான பாதிப்புக்குள்ளான சமூகத்திற்கு அதிர்ச்சி சிகிச்சை, அறுவை சிகிச்சை திறன், அம்பியூலன்ஸ்கள் போன்ற முக்கியமான சேவைகளை நேரடியாக வழங்குகின்றமை குறிப்பிடத்தக்கது.



