Tuesday, December 23, 2025 10:21 am
நாட்டை வந்தடைந்த இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் இன்று செவ்வாய்கிழமை காலை ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவை சந்திக்க உள்ளார்.
இந்த விஜயத்தின் போது அமைச்சர் ஜெய்சங்கர், இலங்கை பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய மற்றும் வெளியுறவு, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சர் விஜித ஹேரத் ஆகியோரையும் சந்திக்க உள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடியின் சிறப்புத் தூதுவராக இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர் நேற்று திங்கட்கிழமை மாலை இந்திய விமானப்படைக்குச் சொந்தமான சிறப்பு விமானத்தில் இலங்கையை வந்தடைந்தார்.
அமைச்சர் ஜெய்சங்கர் தனது பயணத்தை முடித்துக்கொண்டு இன்று பிற்பகல் நாட்டை விட்டு வெளியேற உள்ளார் என இலங்கை வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

