Friday, January 9, 2026 12:51 pm
யாழ்ப்பாணம் – வடமராட்சி கிழக்கு கட்டைக்காட்டு கடற்பரப்பில் இந்திய இழுவைமடி படகுகள் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்டு வருகின்றன.
இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருகையில்,
சீரற்ற காலநிலையால் வடமராட்சி கிழக்கு கடற்பகுதியில் கடல் கொந்தளிப்பாக காணப்படுவதால் மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை. இதனை தமக்கு சாதகமாக பயன்படுத்திய இந்திய இழுவை மடி மீனவர்கள் கட்டைக்காட்டு கடற்பரப்பிற்கு ஒரு கிலோமீற்றர் கரைக்கு அண்ணளவாக வருகை தந்து இழுவை மடி தொழிலில் ஈடுபட்டு வருகின்றார்கள்.
அத்துடன் வெற்றிலைக்கேணிக்கு அருகில் இலங்கை கடற்படையின் மிகப்பெரிய கடற்படை தளம் அமைந்திருக்கின்ற போதிலும் எந்தவித பயமுமின்றி கடற்படை தளத்திற்கு அண்மையாக வந்து இந்திய இழுவைமடி படகுகள் தொழில் செய்து வருகின்றார்கள்.
மேலும், வடமராட்சி மீனவர்களின் வாழ்வாதாரத்தை இந்திய இழுவை மடி மீனவர்கள் அழித்துச் செல்வதை தடுப்பதற்கு இதுவரை காலமும் எந்தவித முயற்சிகளையும் உரியவர்கள் எடுக்கவில்லையென மீனவர்கள் கவலை தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

