Thursday, December 11, 2025 4:10 pm
சமூக ஊடகங்களில் “முத்தையன்கட்டு அணையில் சேதம்” என்ற வதந்தி பரவி வருகிறது.
இது தவறான தகவல். அணையில் எந்தவித சேதமும் இல்லை.வால்கட்டு அருகே சிறிய திருத்தப் பணிகள் மட்டுமே நடைபெற்று வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
முத்தையன்கட்டு அணையின் வால் கட்டு அருகில் சிறிய திருத்த வேலை நடைபெற்று வருகின்றது. இந்தப் பணியில் நீர்ப்பாசன திணைக்களம் , பாதுகாப்புப் படைகள் மற்றும் விவசாயிகள் போன்றோர் ஒன்றிணைந்து செயல்பட்டு வருகின்றனர்.
எனவே பொதுமக்கள் பதற்றம் அடைய வேண்டாம் . எந்தவொரு ஆபத்தான சூழ்நிலை ஏற்பட்டாலும் , அதிகார பூர்வமாக உடனடியாக தகவல் வழங்குமாறு மாவட்ட அனர்த்த முகாமைத்துவ ஒருங்கிணைப்புப் பிரிவு (DDMCU) அறிவித்துள்ளது.
இது போன்ற போலித் தகவல்கள் குறித்து அவதானமாக செயற்பட வேண்டுமென பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றனர்.

