Tuesday, November 11, 2025 2:40 pm
24 மணிநேர பணிப்புறக்கணிப்பு நடவடிக்கையை முன்னெடுக்க அரச தாதியர் உத்தியோகத்தர் சங்கம் தீர்மானித்துள்ளது. இந்த பணிப்புறக்கணிப்பு வடக்கு மாகாணத்தில், நாளை புதன்கிழமை முன்னெடுக்கப்படவுள்ளது.
வடக்கு மாகாணத்தில் உள்ள மருத்துவமனைகளில் பணிபுரியும், தாதிய உத்தியோகத்தர்களுக்கான வருகை மற்றும் புறப்படல் பதிவுக்காக ஏனைய ஊழியர்களுடன் சேர்த்து, ஒரே கையொப்பப் பதிவு புத்தகம் பயன்படுத்த வேண்டும் என்ற வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளரின் முடிவுக்கு எதிராகவே இந்த பணிப்புறக்கணிப்பு முன்னெடுக்கப்படவுள்ளது.
நாளை காலை 7 மணிக்கு ஆரம்பித்து, நாளை மறுதினம் காலை 7 மணிக்கு பணிப்புறக்கணிப்பு நிறைவடையவுள்ளது.
மேலும் வடக்கு மாகாணத்தைத் தவிர, ஏனைய மாகாண சபைகளிலோ அல்லது மத்திய அரசாங்கத்தின் மருத்துவமனைகளிலோ சுகாதார நிறுவனங்களிலோ இத்தகைய நடைமுறை அமுலில் இல்லை என அரச தாதியர் உத்தியோகத்தர் சங்கம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

