Saturday, December 6, 2025 9:55 am
நாட்டில் உருவான அவசர நிலைமையை கருத்திற்கொண்டு அனைத்து அரச ஊழியர்களுக்குமான விடுமுறைகள் இரத்து செய்யப்பட்டுள்ளன.
தற்போது நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலையை கருத்திற் கொண்டே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக உள்நாட்டு அலுவல்கள் அமைச்சு அறிவித்துள்ளது.
இதன்படி, சுகாதார ஊழியர்களின் விடுமுறை இரத்து செய்யப்பட்டுள்ளதாகச் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
அனைத்து சுகாதார ஊழியர்களும் நோயாளி பராமரிப்புக்கு இடையூறு ஏற்படாத வகையில் தங்கள் விடுமுறையை நிர்வகிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதற்கிடையே , காவல்துறை அதிகாரிகளுக்கான விடுமுறை இரத்து செய்யப்பட்டதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

