Wednesday, January 21, 2026 2:11 pm
இலங்கை சந்தையில் இன்று தங்கவிலை இரண்டாவது முறையாகவும் சடுதியாக உயர்ந்துள்ளது.
அகில இலங்கை நகைகடை வியாபாரிகள் சங்கத்தின் தரவுகளின்படி, இன்று முற்பகல் 24 கரட் தங்கம் பவுண் ஒன்றுக்கு 10,000 ரூபாயால் அதிகரித்திருந்த நிலையில், மீண்டும் தற்பொழுது பவுண் ஒன்றுக்கு 5000 ரூபாயால் சடுதியாக அதிகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
24 கரட் தங்கம் பவுண் ஒன்று தற்பொழுது 385,000 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது.
22 கரட் தங்கம் பவுண் ஒன்று 356,125 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது.
24 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 48,125 ரூபாயாகவும், 22 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 44,516 ரூபாயாகவும் விற்பனை செய்யப்படுகிறது.
இன்று ஒரே நாளில் மட்டும் தங்கம் பவுண் ஒன்றுக்கு 15,000 ரூபாய் அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
சர்வதேச சந்தையில் தங்கம் விலை ஒரு அவுன்ஸ் 4,800 அமெரிக்க டொலர்களைத் தாண்டியதே உள்ளூர் சந்தையில் இந்த அதிரடி மாற்றத்திற்கு முக்கிய காரணமாகும்.

