அடையாளம் தெரியாத கும்பலொன்றினால் மானிப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சண்டிலிப்பாய் வடக்கு பகுதியில் வாகனங்களுக்கு தீ வைத்துள்ள சம்பவம் நிகழ்ந்துள்ளது.
இன்று அதிகாலை மோட்டார் சைக்கிளில் சென்ற நான்கு பேர் கொண்ட கும்பல் வீடொன்றின் முற்றத்தில் நிறுத்தப்பட்டிருந்த ஆட்டோவிற்கு மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துள்ளது.
வீட்டில் நிறுத்தப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளை சுமார் ஒரு கிலோமீற்றர் தொலைவில் உள்ள மல்லாகம் வீதியில் உள்ள சந்தியின் நடுவில் நிறுத்தி தீ வைத்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் மானிப்பாய் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
