Wednesday, November 26, 2025 8:40 am
கிளிநொச்சி அக்கராஜன் குளம் பொலிஸ் பிரிவுக்குற்பட்ட ஸ்கந்தபுரம் பகுதியில் மருமகனின் தாக்குதலுக்குள்ளான மாமனார் உயிரிழந்த சம்பவம் நேற்றிரவு இடம்பெற்றுள்ளது.
இறந்தவரின் மகளுடன் மருமகன் சண்டையிட்ட போது, மகள் தந்தை வீட்டிற்கு தப்பியோடி வந்த நிலையில், மகளை தாக்க முற்பட்ட. மருமகனை தடுத்த போது தாக்குதலுக்குள்ளான மாமனார் வைத்தியசாலை கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்துள்ளார்.
இந்த சம்பவத்தில் 59வயதான கதிரவேலு சிவராசசிங்கம் என்பவரே உயிரிழந்துள்ளார். 25வயதுடைய மருமகன் கைது செய்யப்பட்டுள்ளார். அவருடன் சேர்ந்து குறித்த சம்பவத்திற்கு உதவிய குற்றச்சாட்டில் அவரது சிறிய தந்தையும் கைது செய்யப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பாக அக்கராஜன் குளம் பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

