Saturday, December 6, 2025 10:40 am
டித்வா புயல் தாக்கத்தினால் மலைச்சரிவில் சிக்கிய குடும்பத்தினர் மூன்று நாட்களுக்கு பின் உயிரோடு மீட்கப்பட்ட சம்பவம் நாட்டில் நிகழ்ந்துள்ளது.
பசறைப்பகுதியில் பெய்த கனமழை காரணமாக பல வீடுகள் மண்சரிவில் மூழ்கியிருந்தன. குணபால என்பவரது வீடும் புதைந்த நிலையில், குணபால அவரது மனைவி மற்றும் அவரது மகன் ஆகியோர் சமையலறையில் இருந்தனர். வீடு முழுவதும் இடிந்து மண்ணில் புதைந்த போதிலும் சமையலறை பகுதி மட்டும் அதிசயமாக தப்பியது.
மூன்று நாட்கள் மண்ணுக்குள் சிக்கியிருந்த அவர்கள் மூன்றாம் நாளில் கனரக இயந்திரங்களின் அதிர்வுகள் மேலிருந்து கேட்டவுடன் குணபால சிறிய ஓட்டையில் கரண்டியால் தட்டி தன் இருப்பை அறிவித்தார்.
இதனை அவதானித்த இராணுவத்தினர் கனரக இயந்திரங்களின் உதவியுடன் அவர்களை மீட்டுள்ளனர். மீட்கப்பட்ட மூவரையும் மேலதிக சிகிச்சைக்காக இராணுவத்தினர் வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.
மூன்று நாட்கள் மண்ணுக்குள் சிக்குண்டு உணவின்றி, வெளி தொடர்பின்றி மீட்கப்பட்ட குணபால மற்றும் அவரது குடும்பத்தினரின் மீட்பு, அவர்களுடைய மறுபிறவியாக பார்க்கப்படுவதுடன் குறித்த சம்பவம் பெரிதும் பேசப்படும் விடயமாக மாறியுள்ளது.

