Friday, December 19, 2025 1:52 pm
ராகமை , வல்பொல, புனிலவத்த பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் பேஸ்புக் ஊடாக ஒழுங்கு செய்யப்பட்ட களியாட்ட நிகழ்வில் கலந்துகொண்ட 13 பேர் போதைப்பொருட்களுடன் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைதுசெய்யப்பட்டவர்களில் ராகமையைச் சேர்ந்த 20 வயதுடைய யுவதி அடங்குவதாகவும் , குறித்த யுவதியின் தலைமையில் இந்த பேஸ்புக் களியாட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
மேலும் , கைதுசெய்யப்பட்டவர்களிடமிருந்து ஐஸ் உள்ளிட்ட போதைப்பொருட்கள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
அதுமட்டுமின்றி கைது நடவடிக்கையின் போது சந்தேக நபர்கள் அனைவரும் போதையில் இருந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
ஜா-எல, கம்பஹா, கிரிபத்கொடை, களனி மற்றும் சீதுவை ஆகிய பிரதேசங்களில் வசிப்பவர்களே கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை ராகமை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

