Friday, December 26, 2025 11:05 am
இந்தியாவின் குஜராத் மாநிலத்தின் கட்ச் மாவட்டத்தில் இன்று அதிகாலை 4.30 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.
இது குஜராத்தில் ஏற்பட்ட 4வது நிலநடுக்கம் என்பதோடு , 4.4 ரிக்டர் அளவுகோலில் பதிவாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இந்த நில அதிர்வினால் மக்கள் பெரும் அச்சத்துக்குள்ளாகியதோடு , பாரியளவில் உயிர்ச் சேதங்களோ அல்லது பொருட்சேதங்களோ ஏற்படவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் , நிலநடுக்கத்தின் ஆழம் மற்றும் மையம் குறித்த மேலதிக தொழில்நுட்ப விபரங்களை உள்ளூர் நிர்வாகம் தொடர்ந்து கண்காணித்து வருகிறதாக குறிப்பிடப்படுகின்றது.
குஜராத்தின் கட்ச் பிராந்தியமானது அதிக நிலநடுக்க அபாயம் கொண்ட மண்டலமாக வகைப்படுத்தப்பட்டுள்ளதுடன் , இப்பகுதியில் அடிக்கடி சில நில அதிர்வுகள் ஏற்படுவது வழக்கம் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

