Friday, November 21, 2025 12:18 pm
இன்று வெள்ளிக்கிழமை மாவீரர் வாரம் ஆரம்பித்துள்ளது. ஈழத் தமிழர்கள் செறிந்து வாழும் வடக்கு, கிழக்கு தாயகப் பரப்பிலும், புலம்பெயர் தேசங்களிலும் மாவீரர்களுக்கான அஞ்சலி நிகழ்வுகள் இந்தக் காலப்பகுதியில் வெகு சிறப்பாகவும் உணர்வுபூர்வமாகவும் முன்னெடுக்கப்படும்.
மாவீரர் வாரம் ஆரம்பமான முதல் நாளில் வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன், மாவீரர்களுக்கு உணர்வெழுச்சியுடன் தனது அஞ்சலிகளைச் செலுத்தினார்.
மாவீரர் துயிலமில்லத்தினைத் தாங்கிய உருவப்படத்திற்கு சுடரேரற்றி, மலர் தூவி, மாவீரர்களுக்கு உணர்வுபூர்வமாக அஞ்சலிகளைச் செலுத்தினார்.

2026ஆம் ஆண்டிற்கான வரவுசெலவுத்திட்டத்திற்கான நாடாளுமன்ற அமர்வுகளில் பங்கேற்பதற்கென நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் தற்போது கொழும்பில் தங்கியிருப்பதனால் இலங்கைத் தலைநகர் கொழும்பில் வைத்து ரவிகரனால் இவ்வாறு மாவீரர்களுக்கு உணர்வெழுச்சியுடன் அஞ்சலி மேற்கொள்ளப்பட்டிருந்தது.

