Friday, December 12, 2025 12:14 pm
நுவரெலியா கந்தபளையில் இடம்பெற்ற கொலை தொடர்பில் குற்றவாளிகளாக அடையாளம் காணப்பட்ட ஒருவருக்கு நுவரெலியா மாவட்ட மேல் நீதிமன்றம் மரணதண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.
2013 ஆம் ஆண்டு கந்தபளை பகுதியில் சிவலிங்கம் ஞானசேகரன் என்பவர் தனது மனைவி மனோரஞ்சனியை கூறிய ஆயுதத்தால் தாக்கி கொலை செய்த சம்பவம் தொடர்பில், நுவரெலியா மாவட்ட நீதவான் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. 12 ஆண்டுகளாக இந்த சம்பவம் தொடர்பில் விசாரணைகள் இடம்பெற்று வந்தன.
இந்தநிலையில் குறித்த வழக்கு நேற்று வியாழக்கிழமை நுவரெலியா மாவட்ட மேல் நீதிமன்ற நீதிபதி விராஜ் வீர சூரிய முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
குற்றம் சாட்டப்பட்டவர் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டதால் குற்றவாளி எனக் கண்டறியப்பட்டு சிவலிங்கம் ஞானசேகரன் என்ற நபருக்கு மரண தண்டனை மரணதண்டனை விதித்து தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

