எதிர்வரும் காலத்தில் இலங்கையில் லஞ்ச் சீட் பாவனை முற்றாகத் தடை செய்யப்படவுள்ளதாக மத்திய சுற்றாடல் அதிகார சபை தெரிவித்துள்ளது.
லஞ்ச் சீட்க்கு மாற்றாக பிளாஸ்டிக் அல்லாத லஞ்ச் சீட்கள் அறிமுகப்படுத்தப்படுமென மத்திய சுற்றாடல் அதிகார சபையின் தலைவர் பேராசிரியர் திலக் ஹேவாவசம் தெரிவித்துள்ளார்.
அடுத்த மாதம் முதலாம் திகதி முதல் இலவசமாக பொலித்தீன் பைகளை வழங்க முடியாதெனவும் விலைப்பட்டியலில் பொலித்தீன் பைகளின் விலையும் சேர்க்கப்பட வேண்டுமெனவும் நுகர்வோர் விவகார அதிகார சபை அண்மையில் அறிவித்தலை வெளியிட்டிருந்தது.
இதேவேளை வட மாகாணத்தில் லஞ்ச் சீட்க்கு பதிலாக வாழை இலைகளைப் பயன்படுத்துவதற்கான யோசனையும் முன்வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.